கவிதையின் சொற்சிக்கனம் குறித்து
உரையாடிக் கொண்டிருந்த இரவில்
கத்தரிக்கப்பட்ட சொற்குவியல் ஒன்று
கனவில் துரத்தத் துவங்கியது.
அன்றுதான்
தாடைபிளந்து வீசப்பட்ட
ஆயிரமாயிரம் முகக்கவசங்களுக்கிடையே
அலைமோதிக் கொண்டிருந்த
அந்த ஒற்றைச் சொல்லை
ஆகச்சிக்கனமான
ஒரு கவிதையொன்றில் ஏற்றிவைத்தேன்.
கூடுதலாய் ஒரு மிருதுவான சொல்.
அக்கணம்தான்
வாழ்வின் கனம் கூடிப்போனது.
Comments
Post a Comment