சோலை


கு
ளிர் மழையில்லை.
தென்றலும் சுகந்தமுமில்லை.
மலர்கள்கூட இல்லை.
நிறமிழந்துகொண்டிருக்கும்
இலைமீது இரண்டு புழுக்கள்.
மெல்ல நெளிந்தபடி அதன்
விளிம்பைக் கொறிக்கும் ஏகாந்தம்.
தலையுயர்த்தும் 
அதன் உதடுகளில்
ஒரு மீத்துளி பச்சை.
அதனுள் நமக்கொரு 
துளிர்ப் பிரபஞ்சம்.

Comments