Skip to main content
குளிர் மழையில்லை.
தென்றலும் சுகந்தமுமில்லை.
மலர்கள்கூட இல்லை.
நிறமிழந்துகொண்டிருக்கும்
இலைமீது இரண்டு புழுக்கள்.
மெல்ல நெளிந்தபடி அதன்
விளிம்பைக் கொறிக்கும் ஏகாந்தம்.
தலையுயர்த்தும்
அதன் உதடுகளில்
ஒரு மீத்துளி பச்சை.
அதனுள் நமக்கொரு
துளிர்ப் பிரபஞ்சம்.
Comments
Post a Comment